வியாழன், ஜனவரி 25, 2018

உறவுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள உத்திரவாதமும் நமது நிலையும்!!!

السلام عليكم ورحمة الله وبركاته
أعوذ بالله من الشيطان الرجيم   -    بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ، )مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ.) - ( مَنْ عَمِلَ عَمَلاً ليسَ عليه أمرُنا هذا فهو رَدٌّ .)

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ .
اللهم صلِّ على محمد وعلى آلِ محمد، كما صليت على إبراهيم وعلى آلِ إبراهيم إنك حميدٌ مجيد.
اللهم بارك على محمدٍ وعلى آلِ محمد، كما باركت على إبراهيم وعلى آلِ إبراهيم إنك حميدٌ مجيد. -  أَمَّا بَعْدُ "

உறவுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள உத்திரவாதமும் நமது நிலையும்!!!
*******************************************************************************************************************************
இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து (இறை அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) நின்றது. அல்லாஹ் சற்று பொறுஎன்றான். உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்என்றது உறவு. உடனே அல்லாஹ் ‘(உறவே!) உன்னைப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன்; உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பது உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?’  என்று கேட்டான்.  அதற்கு  ஆம் (திருப்தியே) என் இறைவா!என்றது உறவு. இது உனக்காக நடக்கும்என்றான் அல்லாஹ். (இந்த ஹதீஸை அறிவித்த) பிறகு அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ‘(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?’ எனும் (திருக் குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தைக் கூறினார்கள்.ஆதாரம்:புகாரி (ஹதீஸ் எண்:7502).

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي مُزَرِّدٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَلَمَّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرَّحِمُ فَقَالَ مَهْ‏.‏ قَالَتْ هَذَا مَقَامُ الْعَائِذِ بِكَ مِنَ الْقَطِيعَةِ‏.‏ فَقَالَ أَلاَ تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ قَالَتْ بَلَى يَا رَبِّ‏.‏ قَالَ فَذَلِكِ لَكِ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ أَبُو هُرَيْرَةَ ‏{‏فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ‏} (القرآن الكريم  ٤٧:٢٢) ‏ صحيح البخاري (رقم الحديث :٧٥٠٢)

உறவைத் துண்டித்து வாழ்வதன் தீமைகளைப் பற்றி இந்த அளவுக்கு கடுமையாக அல்-குர்ஆனும் ஹதீஸ்களும் எச்சரிக்கின்றது. ஆனால் நம்மில் சிலர் சர்வசாதாரணமாக ஆயுளுக்கும் உன் உறவே வேண்டாம் என இரத்த பந்த உறவுகளைக் கூட துண்டித்து வாழ்வதைக் காண்கிறோம்.

இஸ்லாம் வலியுறுத்தும் வணக்க வழிபாடுகளில் குடும்ப உறவைப் பேணுவதும் மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ்வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்தவேண்டும். துரதிஷ்டவசமாக பலரிடம்  இன்றைய சமூக சூழலில் இரத்த உறவைப் பேணும் நிலை இரத்த உறவுகளை பாதுகாக்கும் நிலை குறைந்து கொண்டே வருவதைப் பார்க்கிறோம். எத்தனையோ தேவையில்லாத அவசியம் இல்லாத பல்வேறு விஷயங்களுக்காக நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள நம்மில் பலர் குடும்ப உறவுக்காக, சொந்த பந்தங்களுக்காக சில நிமிடங்களைக் கூட செலவிட முன்வருவதில்லை.

இஸ்லாம் நமக்கு எதைக் கற்றுத்தருகிறது என்றால், ‘ஒருவர் இஸ்லாத்தில் அனுமதிக்காததை, மானக்கேடான, மற்றொருவருக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்வாராயின், பேசுவாராயின், அல்லது தம் உறவை துண்டித்து வாழ முயற்சிப்பாராயின்; உண்மையான முஃமினான ஒருவர் அவ்வாறு பேசுபவரிடம் கனிவான சொற்களைக் கூறி, அவருடைய தவறுகளை அவருக்கு உணரவைத்து, அவரை மன்னித்து, அன்போடு அவருடன் நல்லமுறையில் நடந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் தவறாக நடந்த, நடக்க முற்பட்டவர் நாணமுற்றவராக தன்னைத் தானே திருத்திக் கொள்வார். இது இஸ்லாம் காட்டும் அழகிய வழி முறை. இன்ஷா அல்லாஹ் நாமும் நம் உறவினர்களை அனுசரித்துப் பேணி வாழ்ந்தால்! அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்களாக நம்மையும் ஆக்கியருள எல்லாம்வல்ல அல்லாஹ் போதுமானவன்.

இதற்காக  அல்லாஹ்வினது கட்டளைகளயும் றஸூலின் வளிகாட்டுதல்களையும் விட்டுக்கொடுக்கலாம்! என்று அர்த்தமில்லை. தவிர்க்கச் சொன்ன விடையம், இடம், காலம், நேரங்களை தவிர்த்தும்; றஸூல் காட்டித்தந்தவாறே (நமது சொந்தக்கருத்தை திணிக்காமல்)  செயற்பட்டுக்கொண்டும் தஃவாப் பணியையும், உறவையும் பேணி மேற்கொள்ளவேண்டும் என்பதே அர்த்தமாகுமம்.

أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ -   بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ - ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ ۖ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ ۖ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ [١٦:١٢٥]
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். அல் குர்ஆன்(16:125)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ - وَمَن تَابَ وَعَمِلَ صَالِحًا فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا [٢٥:٧١]
இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். அல் குர்ஆன்(25:71).