செவ்வாய், அக்டோபர் 15, 2013

வயிற்றில் மலைப்பாம்பு வடிவில் பெருங்குடல்: சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நோயாளி ஒருவரின் வயிற்றில் மலைப் பாம்பின் உருவில் சுருண்டு காணப்பட்ட பெருங்குடல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அந்நோயாளி காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த அதிசய நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (13) சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மருதமுனையை சேர்ந்த பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் இந்த அபூர்வ சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நோயாளியின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.